மக்களே உஷார்.., Matrimony-யில் நூதன பண மோசடி.., 259 பெண்களுக்கு அல்வா கொடுத்த ஆசாமி.., கைது செய்த போலீஸ்!!மக்களே உஷார்.., Matrimony-யில் நூதன பண மோசடி.., 259 பெண்களுக்கு அல்வா கொடுத்த ஆசாமி.., கைது செய்த போலீஸ்!!

பண மோசடி

தற்போதைய காலகட்டத்தில் ஆண், பெண் கல்யாணத்திற்காக அவர்களுடைய பெற்றோர்கள் மேட்ரிமோனியில் தங்களது விவரங்களை பதிவிட்டு அதன் மூலம் வரனை தேடி வருகின்றனர். இதன் மூலம் சிலருக்கு திருமணமும் நடைபெற்று இருக்கிறது. ஆனால் தற்போது இதன் மூலம் ஒரு பண மோசடி நடைபெற்றது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. அப்படி ஒரு சம்பவம் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நரேஷ் புஜாரி என்ற 45 வயதுடைய நபர்  மேட்ரிமோனியில் பல மாடல்களின் புகைப்படங்களை பதிவிட்டு அவரே மாப்பிள்ளை போல் பெண் வீட்டார்களிடம் பேசி, பெண் பார்க்கும் நிகழ்ச்சி வரை சென்று, அப்போது நான் மாப்பிள்ளையின் தாய் மாமன் என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பெண் வீட்டார் சைடில் இருந்து எவ்வளவு பணம் கறக்க முடியுமா பணத்தை கறந்து பின்னர் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து எஸ்கேப் ஆகியுள்ளார். சொல்லப்போனால் அவர் விவாகரத்து பெண்களை தான் டார்கெட் செய்கிறார். இதுகுறித்து போலீசுக்கு தெரிய அவர் அவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தான் ஒரு திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. அதாவது அந்த நபர் இதுவரை மொத்தம் 259 பெண்களின் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். 

பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சரத்குமாரின் முதல் மனைவி.., அட இந்த வாரிசு நடிகரோடையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *