ரத்தத்தில் கலந்த விஷம்.., உயிருக்கு ஆபத்தான நிலையில் மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி.., துரை வைகோ பேச்சு!!ரத்தத்தில் கலந்த விஷம்.., உயிருக்கு ஆபத்தான நிலையில் மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி.., துரை வைகோ பேச்சு!!

மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி

மக்களவை தேர்தல் இன்னும் சில நாட்களில் நடக்க இருக்கும் நிலையில் ஈரோடு மாவட்டம் மதிமுக பொருளாளராக பதவி வகித்து வரும் கணேசமூர்த்தி நேற்று அவரது இல்லத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் எம்.பி.,யாக இருந்த கணேசமூர்த்திக்கு இம்முறை வாய்ப்பு கிடைக்கவில்லை. நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலில் அவருக்கு பதிலாக  துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  இதனால் கடந்த சில வாரங்களாக மன உளைச்சலில் இருந்து வந்த காரணத்தால் தான் தற்கொலைக்கு முயற்சி செய்திருப்பார் என கூறப்படுகிறது.

தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் உடல்நலம் குறித்து  துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில், தற்போது கணேசமூர்த்திக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையில் ஈடுபட்டு வருகின்றனர். அவரின் உடல்நிலை ரொம்ப மோசமாக இருக்கிறது. இருதயம் பாதிப்படைந்து விட்டது. மேலும் விஷம் ரத்தத்தில் கலந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மருத்துவர்கள் நம்பிக்கையை கை விடாமல் முயற்சி செய்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.  

மாஜி தயாரிப்பாளருடன் காதலா? . , நடிகை அஞ்சலிக்கு விரைவில் டும் டும் டும்?., யார் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *