மாவீரன் வீரப்பனுக்கு நினைவுத் தூண்.., திறந்து வைத்த ஆளும் கட்சி வேட்பாளர்.., எந்த பகுதியில் தெரியுமா?மாவீரன் வீரப்பனுக்கு நினைவுத் தூண்.., திறந்து வைத்த ஆளும் கட்சி வேட்பாளர்.., எந்த பகுதியில் தெரியுமா?

மாவீரன் வீரப்பன்

பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு குப்பம் சட்டமன்றத் தொகுதியில் 8வது முறையாக போட்டியிடுகிறார். மேலும் அவருக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர மேல்சபை உறுப்பினரும் பரத் போட்டியிடுகிறார். இதனை தொடர்ந்து அக்கட்சியினர் பிரச்சாரம் செய்து வந்துள்ளனர். அப்போது குப்பம் சட்டமன்ற தொகுதியிலுள்ள சாந்திபுரம் அருகே சந்தனக் கடத்தல் வீரப்பனின் போட்டோவுடன் கூடிய நினைவுத் தூண் ஒன்று சிலர் நிறுவியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், வீரப்பன் நினைவுத் தூணைத் திறந்து வைத்து சிரித்தபடியே போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மூன்று மாநிலங்களை கதிகலங்க வைத்து சிம்ம சொப்பனமாக இருந்து வந்த மாவீரன் வீரப்பனை  காவல்துறையினர் சுட்டு கொன்ற நிலையில், அவருக்காக வைக்கப்பட்டுள்ள நினைவுத்தூணை ஆளும் கட்சியின் மேல்சபை உறுப்பினரான பரத்  திறந்து வைத்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மண்ணை கவ்விய “சைரன்” திரைப்படம்.., ஜெயம் ரவிக்கு மாமியார் கொடுத்த சூப்பர் பரிசு.., இத்தனை கோடி மதிப்புள்ளதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *