வாகன ஓட்டிகள் கவனத்திற்கு ! அடுத்த ஓராண்டுக்கு இந்த பகுதிகளுக்கு செல்ல தடை - போக்குவரத்தில் மாற்றம் செய்து அறிவிப்பு !வாகன ஓட்டிகள் கவனத்திற்கு ! அடுத்த ஓராண்டுக்கு இந்த பகுதிகளுக்கு செல்ல தடை - போக்குவரத்தில் மாற்றம் செய்து அறிவிப்பு !

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு. தற்போது சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்ட பணிகள் மேற்கொள்ளபடுகிறது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் அடுத்த ஓராண்டுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பணிகள் நடைபெறும் இடம் மற்றும் வாகன ஓட்டிகள் செல்வதற்கான மாற்று வழிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு ஒயிட்ஸ் சாலை பகுதிகளில் அடுத்த ஓராண்டுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் ஒயிட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து திருவிக சாலை சந்திப்பு வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

70 ஆண்டுகளாக 272 கிலோ இயந்திர நுரையீரலுக்குள் வாழ்ந்த நபர்.., திடீர் மரணம்.., சோகத்தில் குடும்பத்தினர்!!

மேலும் ராயப்பேட்டையில் உள்ள மணிக்கூண்டில் இருந்து அண்ணா சாலை வழியாக ஒயிட்ஸ் சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள், பட்டுலாஸ் சாலையிலிருந்து ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் இருந்து திரும்பி செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிறகு அண்ணா சாலையில் வழியாக ஸ்மித் சாலையில் வரும் வாகனங்களுக்கு ஸ்மித் சாலை – ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *