மொபைல் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு - முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் அறிவிப்பு !மொபைல் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு - முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் அறிவிப்பு !

மொபைல் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு. தற்போதுள்ள காலகட்டத்தில் மொபைல் போன் இன்றியமையாத சாதனமாக உள்ளது. மேலும் கையில் மொபைல் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருப்பதென்பது அரிதான இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் இந்தியாவில் உள்ள முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் அதன் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் 4ஜி மற்றும் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்கள் நிறுவனங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 5ஜி சேவை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வோடபோன் நிறுவனம் விரைவில் 5ஜி சேவை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில் நாட்டில் உள்ள முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் 20 சதவீதம் வரை ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தற்போது நடைபெற்றுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை 10 முதல் 17 சதவீதம் வரை உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடம் – தமிழ்நாடு அரசு பெருமிதம் !

ஏனென்றால் 5ஜி சேவையை மேம்படுத்தும் உள்கட்டமைப்புக்காக டெலிகாம் நிறுவனங்கள் அதிக அளவிலான முதலீடுகள் செய்துள்ளன. அவ்வாறு செலவு செய்த பணத்தை ஈடுகட்டும் வகையில் விரைவில் ரீசார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *