ச்சீ.., நடுரோட்டில் சொந்த பிள்ளைகளை பிச்சையெடுக்க வைத்த கொடூர தாய்.., 45 நாளில் 2.5 லட்சம் சம்பாத்தியம்!!ச்சீ.., நடுரோட்டில் சொந்த பிள்ளைகளை பிச்சையெடுக்க வைத்த கொடூர தாய்.., 45 நாளில் 2.5 லட்சம் சம்பாத்தியம்!!

தனது சொந்த குழந்தைகளை நடுரோட்டில் வைத்து தாய் செய்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடூர தாய்:

மத்திய பிரதேசத்தின் முக்கிய பகுதியான இந்தூரை சேர்ந்த இந்திரா பாய் (40) என்ற தாய் தனது 8 வயது மகள் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். மேலும் அந்த குழந்தைகள் யாரும் பள்ளிக்கூடத்திற்கு போகவில்லை என கூறப்படுகிறது. அந்த மூன்று குழந்தைகளையும் நடுரோட்டில் அந்த தாய் பிச்சை எடுக்க வைத்துள்ளார். இப்படி குழந்தைகளை கடந்த 45  நாட்களாக பிச்சை எடுக்க வைத்து  சுமார் ரூ.2.50 லட்சம் சம்பாதித்துள்ளார். இப்படி குழந்தைகளை வைத்து  இந்திராவை பர்வேஷ் என்ற தனியார் தொண்டு நிறுவன தலைவி ரூபாலி பார்த்து விசாரணை நடத்திய போது இந்த உண்மை தெரிய வந்தது. விரைவில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு பிள்ளைகளை பிச்சை எடுக்க வைத்ததாக அந்த தாய் கூறியுள்ளார்.

மேலும் அவருடைய பையை சோதனை செய்து பார்த்ததில் ரூ.19,500 பணம் இருந்தது. அதுமட்டுமின்றி அந்த ரூ.2.50 லட்சம் பணத்தில் ரூ.1 லட்சத்தைத் மாமியாருக்கு கொடுத்ததாகவும், ,ரூ.50,000 பணத்தை வங்கி கணக்கில் டெபாசிட் செய்ததாகவும் மீதமுள்ள ரூ.50,000 பணத்தை வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக முதலீடு செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது. அவர்களுக்கு சொந்தமாக வீடு, இருசக்கர வாகனம் உள்ளிட்டவை இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்திரா பாயை கைது செய்து காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது. இரண்டு மகன்கள் தப்பி ஓடிய நிலையில், 8  வயது சிறுமியை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். 

மளமளவென சம்பளத்தை கூட்டிய லவ்வர் மணிகண்டன்.., அடேங்கப்பா., இத்தனை கோடியா?.., கோலிவுட்டில் லீக்கான தகவல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *