மும்பையில் ஐஸ்கிரீமில் இருந்த மனித விரல் விவகாரம்… அது யாருடையது?.. வெளியான ஷாக்கிங் தகவல்!மும்பையில் ஐஸ்கிரீமில் இருந்த மனித விரல் விவகாரம்… அது யாருடையது?.. வெளியான ஷாக்கிங் தகவல்!

Breaking news மும்பையில் ஐஸ்கிரீமில் இருந்த மனித விரல் விவகாரம்: சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசித்து வரும் மருத்துவர் ஒருவர் ஆன்லைன் டெலிவரி மூலம் கோன் ஐஸ்கிரீம் order செய்த நிலையில் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார் . அந்த ஐஸ்கிரீமில் ஒரு மனித விரல் ஒன்று இருந்துள்ளது. இதனால் பதற்றமான அந்த மருத்துவர் உடனே காவல் துறைக்கு புகார் கொடுத்தார். தொடர்ந்து போலீஸ் விசாரணை செய்து வரும் நிலையில் தற்போது முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ஐஸ்கிரீமில் இருந்த அந்த விரலை தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது அந்த விரல் யாருடையது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, கொஞ்ச நாட்களுக்கு முன்னர் அந்த ஐஸ்கிரீம் ஆலையில் வேலை பார்த்த ஒருவருக்கு ஏற்பட்ட விபத்தில் விரல் துண்டானது. அந்த விரல் தான் ஐஸ்கிரீமில் விழுந்து இருக்கலாம் என்றும் அந்த விரலுடைய டி.என்.ஏ மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், ஐஸ்கிரீமில் இருந்த விரலின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போனால் இது குறித்த தகவல் வெளியாகும். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தோனியை தொடர்ந்து பயோ பிக் படமாக உருவாகும் முன்னாள் வீரர் வாழ்க்கை வரலாறு? யாரோட கதை தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *