மும்பையில் பயங்கரம்.. கோன் ஐஸ்க்ரீமுக்குள் இருந்த மனித விரல் - ஆன்லைன் ஆர்டரால் ஷாக்கான பெண்!!மும்பையில் பயங்கரம்.. கோன் ஐஸ்க்ரீமுக்குள் இருந்த மனித விரல் - ஆன்லைன் ஆர்டரால் ஷாக்கான பெண்!!

Ice Cream Cone Human Finger மும்பையில் பயங்கரம்.. கோன் ஐஸ்க்ரீமுக்குள் இருந்த மனித விரல் இன்றைய சமுதாயத்தில் வாழும் பெரும்பாலான பெண்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கத்தை வைத்துள்ளனர். அந்த வகையில் மும்பையை சேர்ந்த ஒரு பெண் ஐஸ்கீரிம் ஆன்லைனில் ஆர்டர் செய்த நிலையில் பார்சலை திறந்து பார்த்த போது பெரும் அதிர்ச்சியை சந்தித்துள்ளார். அதாவது மும்பையில் மலாட் பகுதியில் வாழும் பெண் ஒருவர் ஆன்லைனில் கோன் ஐஸ்கிரீம் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். பார்சல் வந்த பிறகு அவர் கோன் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்த போது துண்டிக்கப்பட்ட மனித விரல் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனே மலாட் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை விசரணையை ஆரம்பித்தனர். மேலும் ஐஸ்கிரீமில் கிடைத்த விரலை எப்.எஸ்.எல்.க்கு (தடயவியல்) பிரிவுக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறை ஐஸ்கிரீம் நிறுவனமான யம்மோ ஐஸ்கிரீம் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுபவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் பயங்கரம்.. கோன் ஐஸ்க்ரீமுக்குள் இருந்த மனித விரல்

நடப்பாண்டு நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறு தேர்வு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *