இந்த மாவட்டத்தில் எல்லாம் நாளை மின்தடைஇந்த மாவட்டத்தில் எல்லாம் நாளை மின்தடை

   இந்த மாவட்டத்தில் எல்லாம் நாளை மின்தடை. மின்சார வாரிய பணியாளர்கள் மாதத்திற்கு ஒரு முறை குறிப்பிட்ட பகுதிகளில் மின்சாரத்தினை தடை செய்து மாதாந்திர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் படி நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் அறிந்து கொள்வோம்.

இந்த மாவட்டத்தில் எல்லாம் நாளை மின்தடை ! உங்க ஏரியா கூட இருக்கலாம் !

இந்த மாவட்டத்தில் எல்லாம் நாளை மின்தடை

மதுரை – அண்ணா நகர் துணை மின்நிலையம் :

   முனிச்சாலை , செல்லூர் , தாகூர்நகர் , சொக்கிக்குளம் , அரவிந் மருத்துவமனை , மாவட்ட நீதிமன்றம் , மீனாட்சி நகர் , OCPM பள்ளி , GH , கோரிப்பாளையம் போன்ற மதுரை மாவட்ட அண்ணா நகர் துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளில் நாளை மின்சாரம் தடை செய்யப்பட்டு மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற உள்ளது. எனவே இந்த பகுதிகளில் 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்சாரம் இயங்காது.

JOIN WHATSAPPCLICK HERE

மதுரை – தொழிற்பேட்டை துணை மின்நிலையம்  :

   மதுரை மாவட்ட தொழிற்ப்பேட்டை துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளான கே.கே.நகர் , அண்ணாநகர் , கே.புதூர் , அப்போலோ மருத்துவமனை , கற்பகம் நகர் , பால் பண்ணை , சந்தை போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்சாரம் இயங்காது. நாளை இப்பகுதியில் மின்சார வாரிய பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்ள உள்ளனர். நாளை மின்தடை

தேனி – வைகை அணை துணை மின் நிலையம் :

   மாவட்ட வைகை அணை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளாவன ஜெயமங்கலம் , ஜம்புலிபுத்தூர் , குள்ளபுரம் போன்ற பகுதிகளில் நாளை மாதாந்திர மின்பராமரிப்பு பணியானது நடைபெற உள்ளது. எனவே காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் செயல்படாது.

தேனி வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையம் – :

    கே.கே.பட்டி , மணலார் போன்ற பகுதிகளில் நாளை மின்சார வாரிய பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியினை செய்ய உள்ளனர். எனவே காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்படும். நாளை மின்தடை

திருச்சி – ஜெயம்கொண்டான் துணை மின்நிலையம் :

   ஜெயம்கொண்டான் துணை மின்நிலையம் சார்ந்த உட்கோட்டை , வரியங்கால் , துளரங்குறிச்சி , செங்குந்தபுரம் , வேலாயுதநகர் போன்ற பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் 2 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும்.

டெங்கு அதிகரிப்பு 20000 பேர்  மருத்துவமனைகளில் அனுமதி ! தூய்மை முக்கியம் மக்களே 

திருச்சி  சமயபுரம் துணை மின்நிலையம்  :

   தேனுர் , வெங்கக்குடி , மருதூர் , மனச்சநல்லூர் , கோனாலை , தச்சங்குறிச்சி , அக்கரைப்பட்டி , பணமங்கலம் , பிச்சந்தர்கோவில் , ஈச்சம்பட்டி , திருப்பத்தூர் , கங்கை காவேரி , ஐயம்பாளையம் போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் இருக்காது. ஏனெனில் மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற உள்ளது. நாளை மின்தடை 

அம்பிகாபுரம் துணை மின்நிலையம் – திருச்சி :

   திருச்சி மாவட்டம் அம்பிகாபுரம் துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளான அரியமங்கலம் , காட்டூர் , சங்கிலியாண்டபுரம் , கல்கந்தர் கோட்டை , மலையப்பா என்ஜிஆர் , வள்ளுவர் என்ஜிஆர் , மிலிட்ரிகிளை , முத்துமணி டவுன் 1 – 12 கிராஸ் போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் செயல்படாது.  

கோயம்புத்தூர் – துடியலூர் துணை மின்நிலையம் :

   கே. வட மதுரை , துடியலூர் , அப்பநாயக்கன்பாளையம் , வி.எஸ்.கே.நகர் , ஓஎன்ஜி.சி.காலனி , பழனி , கவுண்டன் புதூர் , பன்னிமடை , தாளியூர் , பாப்பநாயக்கன்பாளையம் , வேணு கோபால் மருத்துவமனை பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் இருக்காது. நாளை மின்தடை

கோயம்புத்தூர் மெட்ரோ துணை மின்நிலையம் – :

   காந்திபுரம் , சித்தாபுதூர் , டாடாபாத் , ஆவாரம்பாளையம் பகுதி , மேட்டுப்பாளையம் சாலை , சர்க்யூட் ஹவுஸ் , விமானப்படை , சுக்ரவார் பேட்டை , மரக்கடை , ராம்நகர் , சாய்பாபா காலனி , பூமார்க்கெட் , ரேஸ் கோர்ஸ் , சிவானந்தா போன்ற பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்படும். 

மின்தடை செய்யப்படும் என்ற தகவல் மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவைகளில் சில நேரங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *