யாத்தே.., புத்தாண்டில் டாஸ்மாக் வருமானம் இத்தனை கோடியா? அதுவும் இந்த மாவட்டத்திலேயா? மக்கள் ஷாக்!!யாத்தே.., புத்தாண்டில் டாஸ்மாக் வருமானம் இத்தனை கோடியா? அதுவும் இந்த மாவட்டத்திலேயா? மக்கள் ஷாக்!!

இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு விசேஷம் என்றாலும் மதுபானங்களை வைத்து தான் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக பண்டிகை நாட்களில் மதுபான கடைகளில் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக விற்பனையாகும். அந்த வகையில் நேற்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சில முக்கிய மாவட்டங்களில் கூடுதலாக விற்பனை செய்துள்ளதாக டாஸ்மாக் கடை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 198 மதுபான கடைகளில் கடந்த ஞாயிற்று கிழமை (டிசம்பர் 31) அன்று ரூ 8.78 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதே போல் கடந்த வருடம் ரூ.7 கோடியே 4 ஆயிரத்து 242-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கிட்டத்தட்ட ரூ. 1 கோடியே 73 லட்சத்து 758-க்கு கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

JOIN WHATSAPP CLICK HERE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *