பிரபல ரிப்போர்ட்டரை அரிவாளால் தாக்கிய கும்பல்.., போலீசுக்கு போன் பண்ணியும் வராத பரிதாபம்!!பிரபல ரிப்போர்ட்டரை அரிவாளால் தாக்கிய கும்பல்.., போலீசுக்கு போன் பண்ணியும் வராத பரிதாபம்!!

பிரபல தனியார் டிவியில் செய்தியாளராக பணிபுரிந்து வந்த ஒருவரை அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் பிரபல செய்தியாளராக வேலை பார்த்து வந்தவர் தான் நேச பிரபு. இவர் நேற்று தன்னுடைய பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில், இவரை ஒரு கும்பல் சுத்து போட்டு சரமாரியாக அரிவாளால் வெட்டி தப்பி சென்றனர். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

காயங்கள் அதிகமாக இருந்ததால் அவரை கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னர் தன்னை யாரோ பின் தொடர்ந்து வருவது போல் இருந்ததால் காவல்துறைக்கு அழைப்பு விடுத்து நேச பிரபு பேசியதாக அவர் வேலை பார்த்த தனியார் ஊடகம் தெரிவித்துள்ளது. 

விஜய் டிவி சீரியல் நடிகருக்கு திடீர் திருமணம்? பொண்ணு யார் தெரியுமா? வெளியான ஷாக் புகைப்படம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *