கண்ணாயிரம்., அந்த குடைய எடு.., தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை வெளுத்து வாங்க போகுது!!கண்ணாயிரம்., அந்த குடைய எடு.., தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை வெளுத்து வாங்க போகுது!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் பகுதியில் உள்ள சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும். மேலும் புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம் , நாகப்பட்டினம் மற்றும் தஞ்சை  உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை கொட்டி தீர்க்க போகிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மக்களே இப்பவே சார்ஜ் போட்டுக்கோங்க.., தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளைக்கு பவர் கட்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *