தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சில மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள தூத்துக்குடி, நெல்லை பகுதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை வெளுத்து வாங்க போகும் மாவட்டங்கள் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை வெளுத்து வாங்க இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *