நெருங்கும் தேர்தல்.., இந்த சின்னம் தான் வேண்டும்?.., தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்த சீமான்!!நெருங்கும் தேர்தல்.., இந்த சின்னம் தான் வேண்டும்?.., தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்த சீமான்!!

மக்களவை தேர்தல்

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தலில் பயன்படுத்தி கரும்பு விவசாயி சின்னம் இம்முறை நடக்க இருக்கும் தேர்தலில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சீமான் வழக்கு தொடர்ந்த போதிலும், அது அவருக்கு பக்கபலமாக அமையவில்லை. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

ஆனால் மைக் சின்னம் வேண்டாம் என்றும் வேற சின்னத்தை தருமாறு மனு அளித்திருந்தார். இதற்கிடையில் நேற்று சீமான்  நேற்று 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த சீமான், மக்கள் சின்னத்தை பார்த்து ஓட்டு போடும் பழக்கத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் சீமான் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதாவது, நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு படகு அல்லது பாய்மர படகு சின்னத்தை ஒதுக்குமாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.  

கோயில் கருவறைக்குள் திடீர் தீ விபத்து.., 14 பேர் படுகாயம்.., மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *