தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38500 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் !தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38500 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர் - தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் !

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38500 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தற்போது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது 6 கட்ட நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் வரும் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் வரும் ஜூன் 4 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அதன்படி வாக்கு எண்ணும் பணியில் 4500 நுண்பார்வையாளர்கள் மற்றும் 38500 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் 175 சிறப்பு பள்ளிகளுக்கு மதிய உணவு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

அந்த வகையில் வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக வீடியோ காட்சிப்பதிவு நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கையின் போது எந்த வித பிரச்னையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *