Home » செய்திகள் » அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் ! வெளியேறுகிறதா புரட்சி பாரதம் கட்சி – பூவை ஜெகன்மூர்த்தி முக்கிய அறிவிப்பு !

அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் ! வெளியேறுகிறதா புரட்சி பாரதம் கட்சி – பூவை ஜெகன்மூர்த்தி முக்கிய அறிவிப்பு !

அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் !

அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் தேர்தல் காலத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். அந்தவகையில் அதிமுக சார்பில் தேமுதிக, புதிய தமிழகம் கட்சி, புரட்சி பாரதம் கட்சி மற்றும் SDPI போன்ற கட்சிகளுடன் இணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலை அதிமுக சந்திக்கவுள்ளது.

அதிமுக கூட்டணியில் தொடர்வது குறித்து இரண்டுநாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் மக்களவை தேர்தலுக்கான அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தருவதாக புரட்சி பாரதம் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவள்ளூர் தொகுதியை தங்களுக்கு ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இதனை அதிமுக நிராகரித்ததாக கூறப்படுகிறது.

பாமக – விசிக நேரடி மோதல் ! முக்கியத்துவம் பெற்ற விழுப்புரம் நடாளுமன்ற தொகுதி – வெற்றிபெறப்போவது யார் ?

இதனால் அதிருப்தி அடைத்த புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி அதிமுக கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியேற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top