பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு ! மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை விடுதலை செய்து உத்தரவு !பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு ! மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை விடுதலை செய்து உத்தரவு !

பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு. கடந்த சில நாட்களுக்கு முன் கல்லூரி மாணவிகளை தவறான செயல்களில் ஈடுபடவைத்தாக குற்றம் சாட்டப்பட்ட கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. மேலும் இதற்கு உடந்தையாக இருந்தாக குறி மதுரை காமராஜர் கல்லுரி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதி மன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி ! புட்பாய்சன் காரணமாக உடல் நலக்கோளாறு ஏற்பட்டதாக தகவல் !

மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மதுரை காமராஜர் கல்லுரி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *