பொது தேர்வு மாணவர்களே.., இந்த தேதிகளை நோட் பண்ணிக்கோங்க.., அமைச்சர் பொய்யாமொழி அறிவிப்பு!!பொது தேர்வு மாணவர்களே.., இந்த தேதிகளை நோட் பண்ணிக்கோங்க.., அமைச்சர் பொய்யாமொழி அறிவிப்பு!!

தமிழகத்தில்  நடக்க இருக்கும் பொது தேர்தலை முன்னிட்டு 10ம்,11ம் மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, மக்கள் பொது தேர்தலை முன்னிட்டு பள்ளி பொதுத்தேர்வை தள்ளிவைக்க எந்த ஒரு கட்டாயம் இல்லை. எனவே  வருகிற பிப்ரவரி 23ல் 10 வகுப்புக்கான செய்முறைத் தோ்வுகள் தொடங்கி பிப்ரவரி 29ல் முடிவடையும். இதையடுத்து பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 24 வரை பிளஸ் 1க்கான  செய்முறைத் தோ்வும், பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 17 வரை பிளஸ் 2 செய்முறைத் தோ்வும் நடைபெறும்.

பொது தேர்வு மாணவர்களே அமைச்சர் பொய்யாமொழி
பொது தேர்வு மாணவர்களே அமைச்சர் பொய்யாமொழி

இதனை தொடர்ந்து 10வகுப்பு எழுத்துத் தோ்வு வருகிற மாா்ச் 26ல் ஆரம்பித்து ஏப்ரல்8-ஆம் தேதி முடிவடையும்.  அதே போல் பிளஸ் 1க்கான எழுத்துத் தோ்வு மாா்ச் 4ல் தொடங்கி, மாா்ச் 25ல் முடிவடையும். மேலும் பிளஸ் 2க்கான தேர்வுகள் மார்ச் 1 ல்  தொடங்கி மார்ச் 22ல் நிறைவுபெறும். அதுமட்டுமின்றி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10ம் தேதியும், பிளஸ் 1 முடிவுகள் மே 14ம் தேதியும், பிளஸ் 2க்கான முடிவுகள்  மே 6ம் தேதியும் வெளியிடப்படும். மேலும்  எல்லா தேர்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.30க்கு முடிவடையும் என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி  தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *