புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு விவகாரம்.., தற்கொலைக்கு முயற்சி செய்த முக்கிய குற்றவாளி- போலீஸ் கொடுத்த வார்னிங்!!புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு விவகாரம்.., தற்கொலைக்கு முயற்சி செய்த முக்கிய குற்றவாளி- போலீஸ் கொடுத்த வார்னிங்!!

சிறுமி கொலை வழக்கு

சமீபத்தில் உலகையே புரட்டி போட்ட செய்தி என்றால் புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு தான். அதாவது புதுச்சேரி, சோலை நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் வழக்கம்போல் தனது சக நண்பர்களுடன் சேர்ந்து சந்தோஷமாக விளையாடி வந்துள்ளார். அப்போது ஐஸ் வாங்கி கொடுத்து கருணாஸ் என்ற இளைஞன் அந்த சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டுக்குள் அழைத்து சென்று அடித்து துன்புறுத்தி பாலியல் செய்துள்ளார். அப்போது அங்கு வந்த 56 வயது விவேகானந்தன் சென்று பார்த்த போது இளைஞனை கண்டிக்காமல் அவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த இளைஞன் தனது நண்பர்களையும் அழைத்து அவர்களையும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த குழந்தை உயிரை விட்ட நிலையில் ஓடும் சாக்கடையில் அந்த குழந்தையின் உடலை போட்டு உள்ளனர்.

இது குறித்து பலரும் எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவல்துறை விவேகானந்தன் (59), கருணாஸ் (19) கைது செய்து வலுவான விசாரணையை நடத்தி வருகிறது. தற்போது இருவரும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான விவேகானந்தன் தனது சட்டையை கழட்டி அதை வைத்து கழுத்தை நெரித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதை பார்த்து கருணாஸ் சத்தம் போட அங்கிருந்த வார்டன் ஓடி வந்து அவரை காப்பாற்றினார். என்று கூறப்படுகிறது. இதனால் போலீஸ் எச்சரித்த நிலையில், இந்த வழக்கு மூன்று நாட்களில்.விசாரணைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

2024 ஆஸ்கர் விருதுகள்.., ஏழு விருதுகளை தட்டி தூக்கி சாதனை படைத்த பிரபல திரைப்படம் – முழு லிஸ்ட் இதோ!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *