அடக்கடவுளே.., குடிபோதையால் இப்படி கூட சாவு வருமா?.., எங்கே., என்ன நடந்தது?அடக்கடவுளே.., குடிபோதையால் இப்படி கூட சாவு வருமா?.., எங்கே., என்ன நடந்தது?

இன்றைய நவீன காலகட்டத்தில் குடிபோதையால் வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி உயிர் பலியாகும் அளவுக்கு செல்கிறது. அந்த வகையில் ஒரு மதுபிரியர் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்தவர் தான்  சிவசுப்பிரமணியன் (38). மது பழக்கத்திற்கு அடிமையான இவர் நேற்று முன்தினம் வீட்டின் மொட்டை மாடியில் வயிறு முட்ட குடித்துவிட்டு தூங்கியுள்ளார்.

புரண்டு படுக்கும் போது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து கீழே விழுந்த போது, அவருடைய வீட்டின் சுவருக்கும், பக்கத்து வீட்டு சுவருக்கும் இடையில் சிக்கிக் கொண்டார். இதை தொடர்ந்து பக்கத்து வீட்டு காரர் மாடிக்கு சென்ற போது அவர் சிக்கி உள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே காவல் துறைக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 1 மணி நேரத்திற்கு பிறகு அவரை மீட்டனர்.

இதை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குடிபோதையால் இப்படி கூட சாவு வருமா? என்று நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருமணம் குறித்து மெளனம் கலைத்த பிக்பாஸ் ஓவியா?.., என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *