புதுச்சேரி விஷவாயு எதிரொலி... இரண்டு 2 பள்ளிகளுக்கு ஜூன் 17ம் தேதி வரை விடுமுறை!!புதுச்சேரி விஷவாயு எதிரொலி... இரண்டு 2 பள்ளிகளுக்கு ஜூன் 17ம் தேதி வரை விடுமுறை!!

School Holidays 2024 புதுச்சேரி விஷவாயு எதிரொலி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களின்  கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில்  கடந்த 10ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில் புதுசேரியில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் தான்  மூதாட்டி செந்தாமரை (72) என்ற மூதாட்டி கழிவறைக்கு சென்ற போது மயக்கம் அடைந்து நிலையில், அவரை காப்பாற்ற போன மகளையும் பேத்தியையும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியான விஷவாயு  தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

குவைத் தீ விபத்து விவகாரம் .. உயிரிழந்த குடும்பத்திற்கு 2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!!

மேலும் விஷவாயு அந்த பகுதியில் முழுவதும் பரவி இருந்த நிலையில், அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தி வேறொரு பகுதியில் மாநகராட்சி தங்க வைத்தது. அதுமட்டுமின்றி இப்பொழுது வரை அந்த விஷவாயு அப்பகுதி முழுவதும் பரவி காணப்படுவதால்,  ரெட்டியார்பாளையம் பகுதியில் இருக்கும் இரண்டு பள்ளிகளுக்கு மட்டும் வருகிற ஜூன் 17ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விஷவாயு வெளியேறுவதை தடுக்க மாநகராட்சி மும்முரமாக இருந்து வருகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *