நடிகைகளின் கேரவனுக்குள் ரகசிய கேமரா - ராதிகா சரத்குமார் குற்றசாட்டு !நடிகைகளின் கேரவனுக்குள் ரகசிய கேமரா - ராதிகா சரத்குமார் குற்றசாட்டு !

கேரள சினிமாவில் பாலியல் தொல்லை சம்பவத்தை தொடர்ந்து, நடிகைகளின் கேரவனுக்குள் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகள் உடைமாற்றுவதை பார்ப்பதாக ராதிகா சரத்குமார் கூறிய குற்றசாட்டு தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா சினிமாத் துறையில் நடிகைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகளவு நடைபெறுவதாக ஹேமா குழு கேரள அரசிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.

இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் கேரள நடிகர் சங்கத்தின் தலைவர் மோகன்லால் உட்பட அனைத்து நிர்வாகிகளும் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் பலர் இந்த விவகாரம் தொடர்பாக குரல் கொடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகை ராதிகா சரத்குமார் கேரவனில் ரகசிய கேமராவை வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை பார்த்து நடிகர்கள் ரசிப்பதாக அதிர்ச்சியானத் தகவல் ஒன்றை தெரிவித்திருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக மலையாள தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த நடிகை ராதிகா சரத்குமார்,

சினிமா நடிகைகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் என்பது மலையாள சினிமாவில் மட்டுமில்லை, தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து துறைகளிலும்இருக்கிறது.

அதன் பின்னர் மலையாள படம் ஒன்றின் படப்பிடிப்பின் போது, அங்கு இருந்த ஆண்கள் கூட்டமாக அமர்ந்து கொண்டு போனைப்பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தார்கள்.

நான் அதைப்பார்த்துவிட்டு கடந்து சென்று விட்டேன். அதன் பிறகு அதுகுறித்து விசாரித்த போதுதான், அவர்கள் நடிகைகளின் கேரவனில் ரகசியமாக கேமரா வைத்து, நடிகைகள் உடை மாற்றுவதை பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்பது எனக்குத் தெரிந்தது.

ஹைதராபாத்தில் வாடிக்கையாளர் லேப்டாப்பை திருடிய டெலிவரி பாய் – கடைசியில் நடந்தது என்ன?

இந்த சம்பவத்தால் நான் பயந்து போய் கேரவனில் உடைகளை மாற்றாமல் ஹோட்டல் அறைக்குச் சென்று உடையை மாற்றினேன் என்றும்

இது பற்றி சக நடிகைகளுக்கும் சொல்லி எச்சரித்தேன். மேலும் அது எந்த படப்பிடிப்பு என்று நான் சொல்ல விரும்பவில்லை.

அத்துடன் சினிமாவில் சிஸ்டமே தவறாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். தற்போது ராதிகா சொன்ன இந்த அதிர்ச்சித் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *