நிலநடுக்கத்தில் மாட்டிக்கிட்ட இயக்குனர் ராஜமெளலி.., இப்போ எப்படி இருக்கிறார்?.., மகன் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு!!நிலநடுக்கத்தில் மாட்டிக்கிட்ட இயக்குனர் ராஜமெளலி.., இப்போ எப்படி இருக்கிறார்?.., மகன் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு!!

இயக்குனர் ராஜமெளலி

திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ராஜ மவுலி. இவர் இயக்கத்தில் வெளியான நான் ஈ, மாவீரன், பாகுபலி, ஆர் ஆர் ஆர் என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இரண்டு படங்கள் 1000 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.  இந்நிலையில் அவர் குறித்து ஷாக்கிங் நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனர் ராஜ மவுலி தனது மகன் கார்த்திகேயாவுடன் ஜப்பானில் இருந்த நிலையில், அங்கு திடீரென இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் செய்வதறியாமல் திகைத்து நின்றதாக அவருடைய மகன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ” ஜப்பானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சொல்லப்போனால்  தரை மெதுவாக நகர ஆரம்பித்தது. நாங்கள் 28வது மாடியில் இருந்த போதிலும் இது நிலநடுக்கம் என்று உணரவே நேரமானது. இதனால் கொஞ்சம் பயத்தில் இருந்தோம் குறிப்பிட்ட அவர் தனது ஸ்மார்ட் வாட்சில் வந்த நிலநடுக்க எச்சரிக்கை குறுஞ் செய்தியையும் படம் எடுத்து பதிவிட்டுள்ளார். இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் ஜப்பானில் ரிக்டர் அளவுகோலில் 6 எனப் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

2024 பாராளுமன்ற தேர்தல்.., திமுக – அதிமுக 18 தொகுதிகளில் நேரடி மோதல்.., 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *