நீண்ட நாள் காதலனை கரம் பிடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்.., பிரதமர் மோடியால் திருமணத்தில் வந்த திடீர் மாற்றம்.., என்ன தெரியுமா?நீண்ட நாள் காதலனை கரம் பிடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்.., பிரதமர் மோடியால் திருமணத்தில் வந்த திடீர் மாற்றம்.., என்ன தெரியுமா?

தமிழ்  சினிமாவில்  முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை  ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தமிழில் சில காலம் கேப் எடுத்துக் கொண்ட இவர், சமீபத்தில் வெளியான அயலான் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து உலகநாயகன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வெளியானதற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவருடைய  நீண்ட கால காதலனான பாலிவுட் தயாரிப்பாளர் ஜாக்கி பக்நாணியை திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இவர்களின் திருமணம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது  ரகுல் ப்ரீத் சிங் தனது திருமணத்தை வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், சமீபத்தில் வெளிநாட்டில் எந்த ஒரு விசேஷமும் வைக்க வேண்டாம் என்றும் இந்தியாவிலே வையுங்கள் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதனால் அவருடைய திருமணத்தை கோவாவில் கடற்கரை அருகே வரும் பிப்ரவரி 21ம் தேதி  நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திருமண பத்திரிகை புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

செம்மல..,23 வயதில் நீதிபதியான பழங்குடியின இளம்பெண்.., குழந்தை பிறந்த 2வது நாளில் தேர்வு எழுதி அசத்தல்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *