ஆர்சிபியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமனம் - RCB நிர்வாகம் அறிவிப்பு!ஆர்சிபியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமனம் - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Breaking News: ஆர்சிபியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமனம்: நடந்து முடிந்த T20 உலக கோ1ப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது. கடைசியாக 2007ம் ஆண்டு இந்திய அணி முன்னாள் கேப்டன் MS தோனி தலைமையில் தான்  T20 உலக கோப்பை ட்ராபியை இந்தியா கைப்பற்றியது.

தற்போது 17 வருடங்களுக்கு பிறகு ரோஹித் சர்மா தலைமையில் தற்போது இந்தியாவுக்கு ஒரு ட்ராபி கிடைத்துள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் போட்டி என்றால் அது IPL தான். இந்த ஆண்டு IPL ட்ராபியை KKR அணி கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு எந்த அணி வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் வரும் IPL சீசன்களில் ஆவது கோப்பையை கைப்பற்ற வேண்டும் RCB ரசிகர்கள் இப்பொழுது வரை தவமாய் தவம் இருந்து வருகின்றனர்.

கடந்த சீசனில் CSK அணியை நூலிழையில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டியுடன் வெளியேறினார்.

Also Read: T20 உலக கோப்பை இறுதி போட்டியில் கோலி இல்லையா? சூசகமாக சொன்ன ரோகித்!!

அதுமட்டுமின்றி கடந்த சீசனில் RCB அணியின் முக்கிய வீரரான தினேஷ் கார்த்திக் தனது ரிட்டைர்மென்ட்டை அறிவித்தார். இந்நிலையில் தினேஷ் கார்த்திக் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று ஆர்சிபி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

  1. T20 World cup 2024 winner ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *