Home » செய்திகள் » வாக்குச்சீட்டில் பெண் செய்த காரியம்.., கைது செய்த காவல்துறை..நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

வாக்குச்சீட்டில் பெண் செய்த காரியம்.., கைது செய்த காவல்துறை..நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

வாக்குச்சீட்டில் பெண் செய்த காரியம்.., கைது செய்த காவல்துறை..நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

வாக்குச்சீட்டில் பெண் செய்த காரியம்

தற்போது நாட்டில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ரஷ்ய நாட்டில் கடந்த மார்ச் மாதம் 15 முதல் 17 வரை அதிபர் தேர்தல் களைகட்டி வந்தது. இந்த தேர்தலில் மொத்தம்  87.32 சதவிகித வாக்குகள் பெற்று ஜனாதிபதி விளாடிமிர் புதின்  5-வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் வாக்குகள் எண்ணிய சமயத்தில் ஒரு வாக்கு சீட்டில் மட்டும் போர் வேண்டாம் என்று எழுதப்பட்டிருந்தது.

அதாவது சமீப காலமாக  ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்ந்து நடந்து வருகிறது என்று எல்லா நாடுகளுக்கும் தெரியும். இப்படி போரை விரும்பாத அலெக்ஸாண்ட்ரா என்ற பெண் வாக்குச்சீட்டில் ‘போர் வேண்டாம்’ என எழுதி வாக்களித்துள்ளார் என்று தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த பெண்ணை கைது செய்த காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில்,  “இந்த செயல் நம் நாட்டையும், நம் நாட்டு படை வீரர்களையும் அவமானப்படுத்தி இருக்கிறது என்று நீதிமன்றம் கோபம் அடைந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த பொண்ணுக்கு  440 யூரோக்கள் அபராதம் மற்றும் 8 நாட்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியலில் குதிக்கும் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள்.., அதுவும் எந்த கட்சி தெரியுமா?.., வெளியான முக்கிய தகவல்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top