சேலம் குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா: மான் முட்டியதில் ஊழியர் உயிரிழப்பு - என்ன நடந்தது?சேலம் குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா: மான் முட்டியதில் ஊழியர் உயிரிழப்பு - என்ன நடந்தது?

சேலம் குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா: சேலம் மாவட்டத்தில் முக்கிய பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக விளங்கி கொண்டிருப்பது ஏற்காடு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குருவம்பட்டி  உயிரியல் பூங்கா. இந்த பூங்காவில் கடமான், புள்ளிமான், மயில், வெள்ளை மயில், முதலை, வெளிநாட்டு பட்டாம்பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்கள் இருக்கிறது. அதை காண்பதற்கு பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கோடை விடுமுறையை முன்னிட்டு திரண்டு வருகின்றனர். குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை  சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்து வருகிறது.

அங்கு வரும் மக்கள் விலங்குகளுடன் புகைப்படம் எடுத்து கொண்டு மகிழ்வார்கள். இந்நிலையில் இந்த பூங்காவில் பெரும் அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது சேலம்  குருவம்பட்டி  உயிரியல் பூங்காவில் வேலை பார்க்கும் தமிழ் செல்வன் என்ற இளைஞர் விலங்குகளை பராமரித்து வந்த சமயத்தில் ஒரு மான் அவரை முட்டி தூக்கியது. இதில் தமிழ் செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதுமட்டுமின்றி அங்கு வேலை பார்த்த இன்னும் இரண்டு ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா – salem kurumbapatti zoo – tamilnadu news – zoo news – death news

IND vs PAK T20 World Cup 2024: இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் சிக்கல்? Match நடைபெறுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *