சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் மூன்றாவது திருமணம்சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் மூன்றாவது திருமணம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும் சானியா மிர்சாவின் முன்னாள் கணவருமான சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவத் ஐ திருமணம் செய்து கொண்டார்.

சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் இரண்டாவது திருமணம்

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஹைதராபாத்தில் பிறந்து தனது 6 வயதில் இருந்தே டென்னிஸ் விளையாடுபவர் சானியா மிர்சா. கிராண்ட்ஸ்லாம் உள்பட பல டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொண்டு பல கோப்பைகளை இந்தியாவிற்காக வாங்கி தந்தவர் சானியா மிர்சா.

பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை.., 40 தமிழக மீனவர்கள் விடுதலை.., இலங்கை அரசு உத்தரவு!!

பின்னர் இவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கும் காதலிப்பதாக தகவல் பரவி வந்தது. நாடு கடந்த அவர்களது காதலுக்கு பல எதிர்ப்புகள் வந்தபோதும் 2010 ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது.பின்னர் 12 ஆண்டுகள் எந்த வித பிரச்சனையுமின்றி அவர்களது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.

JOIN WHATSAPP CLICK HERE

ஆனால் அதன் பின்னர் இவர்களது வாழ்க்கையில் விரிசல் விழ தொடங்கியது. காரணம் சோயிப் மாலிக்கும் மாடல் அழகி ஆயிஷா ஓமரும் ஒரு விளம்பர படத்தில் நடித்தனர். பின்னர் நெருங்கி பழக ஆரம்பித்தனர். அதனை கண்ட சானியா மிர்சாவுக்கு பிடிக்கவில்லை. நாளடைவில் இவர்கள் பிரிய முடிவெடுத்தனர்.

2012 ம் ஆண்டு இவர்கள் இருவரும் சட்டபூர்வமாக பிரிந்து விட்டனர். விளையாட்டு போட்டிகளில் பல கோப்பைகளை வாங்கிய சானியாவின் வாழ்க்கை தோல்வி அடைந்தது. இன்று சானியாவின் முன்னாள் கணவர் சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவதை 2 வதாக திருமணம் செய்து கொண்டார்.

By Revathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *