சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து - பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தகவல் !சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து - பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தகவல் !

தற்போது சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் இந்த வெடி விபத்தில் சிக்கியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டி என்ற பகுதியில் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 20 அறைகள் உள்ளன.

அந்த வகையில் இன்று வழக்கம் போல் ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த வெடி விபத்தில் மூன்று அறைகள் இடிந்து தரைமட்டமான நிலையில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் தீயை அணைத்து தற்போது மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுவிலக்கு அமலாக்கதுறை சட்ட திருத்த மசோதா – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

இதனையடுத்து இந்த சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் சந்திரப்பட்டியைச் சேர்ந்த செல்வக்குமார்(44), சூரங்குடியைச் சேர்ந்த மாரிச்சாமி(44), அச்சங்குளுத்தையைச் சேர்ந்த ராஜ்குமார்(42), மோகன்(50) ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மேலும் பலர் வெடி விபத்தில் விபத்தில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. தற்போது இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பட்டாசுக்கு ரசாயண மூலப்பொருள் கலவை பணி செய்து கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *