சவுக்கு சங்கர் அலுவலகத்தில் போலீஸ் சோதனை - பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்?சவுக்கு சங்கர் அலுவலகத்தில் போலீஸ் சோதனை - பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்?

சவுக்கு சங்கர் அலுவலகத்தில் போலீஸ் சோதனை: யூடியூபில் சவுக்கு மீடியா என்ற சேனலை நடத்தி வரும் சவுக்கு சங்கர் என்பவரை காவல்துறை தேனியில் வைத்து கைது செய்தது. இதையடுத்து அவர் மீது அடுக்கடுக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கஞ்சா கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கஞ்சா வழக்கு காரணமாக சென்னை தி.நகரில் இருக்கும் சவுக்கு சங்கரின் அலுவலகம் மற்றும் மதுரவாயலில் இருக்கும் அவருடைய வீட்டில் தேனி காவல்துறை மற்றும்  காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சவுக்கு சங்கருக்கும் கஞ்சா விற்பனை செய்யபவர்களுக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என்று காவல்துறை விசாரணை செய்து வருகிறது.

IPL 2024 Impact Player Rule நீடிக்குமா? பிசிசிஐ ஜெய்ஷா ஷாக்கிங் தகவல்!

மேலும் அவருடைய வீட்டில் கஞ்சா பொருட்களை பதுக்கி வைத்துள்ளாரா? என்ற கோணத்தில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் இருந்த சாவுக்கு சங்கர் இன்று சென்னைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சவுக்கு சங்கர் அலுவலகத்தில் போலீஸ் சோதனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *