சவுக்கு சங்கர் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் - நீதிமன்றம் வைத்த செக்? என்ன நடந்தது?சவுக்கு சங்கர் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் - நீதிமன்றம் வைத்த செக்? என்ன நடந்தது?

சவுக்கு சங்கர் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார்: தற்போது சோசியல் மீடியாவில் வெடித்து கொண்டிருக்கும் செய்தி என்றால் அது சவுக்கு சங்கரின் போதை பொருள் கடத்திய வழக்கை பற்றி தான். பெண் காவலர்களை அவர் அவதூறாக பேசியதாக புகார் எழுந்த நிலையில் கோவை போலீஸ் தேனி மாவட்டத்தில் வைத்து அதிரடியாக அரெஸ்ட் செய்தது. அப்போது அவர் பயன்படுத்திய காரில் போதை பொருள் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் மீது போதை பொருள் கடத்தல் வழக்கு போடப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தன்னை காவல்துறையினர் தாக்கியதாக கூறிய சவுக்கு அடுத்த வாய்தாவில் தன்னை யாரும் தாக்கவில்லை என்று கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சவுக்கு சங்கர் தனது ஜாமீன் வேண்டி மனு அளித்திருந்தார். இந்நிலையில் இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சவுக்கு சங்கர் திடீரென தனது ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார். அதை நீதிபதி செங்கமல் ஏற்றுக்கொண்டார். வழக்கு தொடர்ந்து விசாரணையில் இருந்து வந்த நிலையில் எதற்காக சவுக்கு மனுவை வாபஸ் பெற்றார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதை வைத்து பார்க்கும் பொழுது சவுக்கு சங்கர் இனி வெளி உலகத்தை பார்க்க வாய்ப்பு கம்மி தான் என்று தெரிகிறது. savukku shankar case issue – savukku media

பீகாரில் வருகிற ஜூன் 8ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை – வெயிலின் தாக்கம் எதிரொலி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *