இடைநிலை ஆசிரியர் தேர்வர்கள்.., 20ம் தேதி வரை தான் டைம்.., தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!இடைநிலை ஆசிரியர் தேர்வர்கள்.., 20ம் தேதி வரை தான் டைம்.., தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் இருக்கும்  இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வாணையம் தேர்வு நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது அரசு பள்ளிகளில் உள்ள 1768 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை  கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, 2024 ஆம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு பிப்ரவரி 9ஆம் தேதி அறிவித்த நிலையில், அதற்கான விண்ணப்பத்தை 15.03.2024 மாலை 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த தேர்வுக்கு ஏகப்பட்ட தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்வர்கள் கடைசி தேதி 15.03.2024இல் இருந்து 20.03.2024 மாலை 5.00 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூர் குண்டு வெடிப்பு விவகாரம்.., முக்கிய குற்றவாளி கைது.., என்.ஐ.ஏ போலீசார் அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *