தற்போது சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க தொடரப்பட்ட வழக்கில் விசாரித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதன் படி அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்றும், மேலும் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடரலாம் என்றும் கூறி அந்த மனுவையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆட்சியிலும் சரி தற்போதுள்ள திமுக ஆட்சியிலும் சரி மிகவும் சக்தி வாய்ந்த அமைச்சர்களில் முதன்மையாக விளங்கியவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. மேலும் இவர் மின்சாரம் மற்றும் மது விலக்கு துறையை கவனித்து வந்தார்.

கடந்த மே மாதத்தில் ஐடி அதிகாரிகள் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டத்தில் அன்று இரவே கைது செய்யப்பட்டார். இன்றுவரை அவருக்கு ஜாமீன் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது அந்த வழக்கில் உச்ச நீதி மன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி ஆளுநருக்கு அமைச்சரை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் இல்லை என்றும் மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடரலாம் என்று தீர்ப்பு வழங்கி இந்த வழக்கை ரத்து செய்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *