எல்லா கடவுளையும் வேண்டுனேன்.., கை கொடுக்கல.., விஜய் அரசியல் குறித்து எமோஷனலான முக்கிய பிரபலம்!!எல்லா கடவுளையும் வேண்டுனேன்.., கை கொடுக்கல.., விஜய் அரசியல் குறித்து எமோஷனலான முக்கிய பிரபலம்!!

விஜய் தொலைக்காட்சியில் நம்பர் ஒன் சீரியலாக இருந்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் சமீபத்தில் தான்  நிறைவடைந்தது. இதில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் வெங்கட். தற்போது இவர் கிழக்கு வாசல் சீரியலில் விஜய்யின் அப்பாவுடன் சேர்ந்து நடித்து வருகிறார். பொதுவாக வெங்கட் ஜாலியாக இருக்கும் இவர், தற்போது தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு சோகமான செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அவர், பொதுவாக எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு கனவு கண்டிப்பாக இருக்கும். அந்த கனவை நிறைவேற்ற பல முயற்சிகளை செய்து வருவோம். அதே போல் எனக்கும் ஒரு கனவு இருந்தது.

அது என்னவென்றால் விஜய் அண்ணாவுடன் சேர்ந்து ஒரு படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்று தான். ஆனால் நான் வேண்டாத கடவுள்கள் இல்லை. சொல்லப்போனால் தினமும் கடவுளை வேண்டுவேன். படம் முழுக்க இல்லையென்றாலும் ஒரு காட்சியில் கூட நிற்பது போலாவது நடிக்க வேண்டும் என வேண்டினேன். நேற்றும் வேண்டினேன், அதற்கு முந்தைய நாளும் வேண்டினேன் என எமோஷனலாக கூறியுள்ளார். விஜய் அரசியலில் இறங்கிய நிலையில் படத்தில் நடிப்பதை நிறுத்த போவதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் நடித்த “லால் சலாம்” படத்திற்கு தடை.., வெளியான அதிர்ச்சி தகவல்.., சோகத்தில் ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *