புருஷனை டைவர்ஸ் செய்யும் சீரியல் நடிகை ஆலியா மானசா? பழிவாங்க நினைச்சேன்.., ஆனா.., உண்மையை உடைத்த பிரபலம்!!!புருஷனை டைவர்ஸ் செய்யும் சீரியல் நடிகை ஆலியா மானசா? பழிவாங்க நினைச்சேன்.., ஆனா.., உண்மையை உடைத்த பிரபலம்!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகை ஆலியா மானசா. அந்த தொடரில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளன. தற்போது இருவரும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் சஞ்சீவும்,  இனியா சீரியலில் ஆலியாவும் நடித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

குறிப்பாக தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட போட்டோவை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக தனது கணவருடன் போட்டோ போடாமல் இருந்து வருகிறார். இதனால் அவர்கள் டைவர்ஸ் வாங்க போகிறார்கள் என்று இணையத்தில் செய்திகள் தீயாய் பரவி வருகிறது.

இந்நிலையில் இது குறித்து பேசிய ஆலியா மானசா, ” எங்களுக்கு விவாகரத்து ஆகப்போவதாக செய்திகள் வெளியான போது நாங்கள் இரண்டு பேரும் சிரித்து கொண்டு தான் இருப்போம். இதற்கு வேற என்ன ரியாக்சன் கொடுப்பது. ஆனால் என்னால் சில ஏமாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. சொல்ல போனால் நம்ம கூடவே இருக்கும் நபர்கள் ஏமாற்றுவதை பார்த்து கோபப்பட்டு இருக்கிறேன். அதற்காக அவர்களை பழி வாங்கனும்  என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் அந்த சிந்தனை எனக்கு வருவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.  

10ம் வகுப்பு மாணவர்களே.., பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்., பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *