சின்னத்திரை சித்ரா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் - மீண்டும் சிக்கலில் சிக்கும் ஹேம்நாத்!சின்னத்திரை சித்ரா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் - மீண்டும் சிக்கலில் சிக்கும் ஹேம்நாத்!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத் விடுதலையான நிலையில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சின்னத்திரை சித்ரா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்

சின்ன குயில் சித்ரா போன்று சின்னத்திரை சித்ரா என்றால் தெரியாத ஆட்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவர் எல்லாருக்கும் பரிச்சயமானவர். ஏனென்றால் அவர் போகாத சேனல் இல்லை, செய்யாத பனி இல்லை, தொகுப்பாளினியாக தொடங்கி நடிப்பு வரை பணியாற்றியுள்ளார். கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

அந்த சீரியல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமான இவர்  கடந்த 2020ம் ஆண்டு ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் இறந்த கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தான் ஹேம்நாத் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சித்ராவின் மரணத்திற்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று பலரும் குற்றம் சாட்டியிருந்தார்.

சித்ராவின் தாயார் மற்றும் தந்தை புகார் கொடுத்த நிலையில், ஹேம்நாத் மீது வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சில மாதங்களுக்கு முன்னர் தான் ஜாமீன் பெற்று வெளியே வந்த நிலையில், தற்போது சித்ராவின் தற்கொலை வழக்கில் புதிதாக திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அதாவது ஹேம்நாத் ரிலீஸ் ஆனதை எதிர்த்து சித்ராவின் தகப்பனார்  சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

Also Read: வாழை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, ” என்னுடைய மகளின் கொலை வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்கள் முறையாக கவனிக்காமல் மகளிர் நீதிமன்றம் அவரை ரிலீஸ் செய்து உத்தரவிட்ட தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். எனவே இந்த மனு கூடிய விரைவில் விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஹேம்நாத் மீண்டும் சிக்கலில் சிக்குவாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

விஜய்யின் தவெக முதல் மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு?

விஜய்யின் தவெக கட்சி முதல் மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்கிறாரா?

10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் அஜித்

ஆர்த்தி மீது போலீசில் புகார் கொடுத்த ஜெயம் ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *