Siragadikka Aasai: முத்துவிடம் வசமாக சிக்கிய மனோஜ் - கூனி குறுகி நின்ற ரோகிணி - பரபரப்பான கட்டத்தில் "சிறகடிக்க ஆசை" சீரியல்!Siragadikka Aasai: முத்துவிடம் வசமாக சிக்கிய மனோஜ் - கூனி குறுகி நின்ற ரோகிணி - பரபரப்பான கட்டத்தில் "சிறகடிக்க ஆசை" சீரியல்!

Siragadikka Aasai: முத்துவிடம் வசமாக சிக்கிய மனோஜ்: விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வரும் தொடர் என்றால் அது “சிறகடிக்க ஆசை” தொடர் தான். எல்லா வீட்டிலும் இருப்பது போல் மூன்று மகன்கள் இருக்கும் குடும்பத்தில் மூத்த மகனுக்கு சப்போர்ட் செய்து இரண்டாம் மகனை சுத்தமாக ஒதுக்கும் அம்மாவின் கதை தான் இது.

கதையில் அடுத்தடுத்து சுவாரஸ்யமான காட்சிகள் அரங்கேறி வருவதால் இல்லத்தரசிகள் டிவி சேனலை மாற்ற ரீமோர்ட்டை கையில் எடுக்காமல் இருந்து வருகின்றனர்.

இந்த வாரம் அதிரடியாக பாட்டி என்ட்ரி கொடுத்த நிலையில், அவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது மீனா தனது நகையை அம்மா விஜயாவிடம் கேட்க அதை எடுத்து கொடுத்துள்ளார்.

அதை வைத்து வேறு நகையை வாங்க போன இடத்தில் அந்த நகை கவரிங் என்று கடைக்காரர் கூற அப்போது தான் வீட்டில்  நகை பிரச்சனை ஆரம்பிக்கிறது.

இதையடுத்து முத்து மற்றும் மீனா இருவரும் உண்மையை கண்டறிய பல முயற்சிகளை செய்து வருகின்றனர். ஆனால் விஜயா தான் மீனாவின் நகையை மனோஜிடம் கொடுத்துள்ளார் என்பது  பேருக்கு மட்டுமே தெரியும்.

Also Read: பத்து வருஷமா கிடப்பில் இருந்த “மதகஜராஜா” திரைப்படம் – ரிலீஸ் எப்போது தெரியுமா?

இந்நிலையில் இன்றைக்கான சிறகடிக்க ஆசை சீரியலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் முத்துவும் அவனின் நெருங்கிய நண்பரும் போலீஸ் ஸ்டேஷன் சிறையில் இருப்பது போன்று காட்டப்படுகிறது.

முத்து சிறையில் இருப்பது தெரியாமல் அங்கு வந்த மனோஜ், தனக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு விடுமோ என பயந்து அனைத்து உண்மைகளையும் போலீசிடம் கூறுகிறார்.

அப்போது முத்து அதை தனது செல்போன் மூலம் படம் பிடிக்கிறார். ஒருவழியாக முத்துவிடம் மனோஜ் மாட்டிக்கொண்டான்.

இனிமேல் தான் முத்துவின் ஆட்டமே இருக்கிறது என்பது போன்று ப்ரோமோ வீடியோ முடிவடைகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *