சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து - இரண்டு பேர் உயிரிழப்பு!சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து - இரண்டு பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் உள்ள சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து: தமிழகத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் கடந்த சில மாதங்களாக வெடி விபத்து1 ஏற்பட்டு உயிர்கள் பலியாகும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது  சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி,விருதுநகர் மற்றும் சாத்தூர்  உள்ளிட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு ஆலைகளில் 100 ஆட்களுக்கு மேல் வேலை பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் காளையார் குறிச்சியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் வழக்கம் போல் இன்று காலை பணியாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

Also Read: பொறியியல் படிப்பு 2024  – தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு!!

இந்த விபத்தில் ஒரு அறை தரைமட்டமானது. மேலும் இந்த கோர சம்பவத்தில் மாரியப்பன் (45), முருகன் (45) என்ற இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 2 பெண்கள் காயமடைந்தனர்.

தற்போது அந்த பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  1. Fire accidents in tamilnadu latest news ↩︎

tamil nadu news – india latest news – fire accident recent news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *