சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை - 3 பேரை கைது செய்தது காவல்துறை !சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை - 3 பேரை கைது செய்தது காவல்துறை !

தற்போது சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் கார்த்திக் பாண்டி இவரது வயது 24. மேலும் இவர் சிவகாசியில் பகுதியில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பொன்னையா என்பவரது மகள் நந்தினியும் காதலித்து வந்துள்ளனர். அந்த வகையில் இருவரும் சில மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டு தனியாக வசித்து வந்துள்ளனர்.breaking news today

இந்நிலையில் கார்த்திக் பாண்டி அவரது காதல் மனைவியின் அண்ணன்களான பாலமுருகன், தனபாலன் மற்றும் இவர்களின் நண்பரான சிவா ஆகிய மூன்று பேரால் நேற்று (24.07.2024) இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானதாக கூறப்பட்டது. இந்த கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடியவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் 2024 – முதலிடத்தை பிடித்த சிங்கப்பூர் – இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

இந்நிலையில் இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரை இன்று (25.07.2024) போலீசார் கைது செய்துள்ளனர். இளைஞர் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் சகோதரர்கள் பாலமுருகன், தனபாலன் ஆகிய இருவர் மற்றும் அவர்களது நண்பர் சிவா உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகாசியில் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *