சென்னை திரும்ப இன்றும் நாளையும் சிறப்பு பஸ்கள் -  போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பு!!சென்னை திரும்ப இன்றும் நாளையும் சிறப்பு பஸ்கள் -  போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பு!!

சென்னை திரும்ப இன்றும் நாளையும் சிறப்பு பஸ்கள்:தமிழகத்தில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் அனைவரும் வாக்குப் பதிவு செய்வதற்கு ஏதுவாக பொது விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் வெளியூரில் இருந்து தாங்கள் சொந்த ஊருக்கு சென்று ஓட்டு போட செல்வதற்கு சென்னையில் இருந்து 10 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இந்நிலையில் ஓட்டு போட்டவர்கள் மீண்டும் வெளியூர் செல்வதற்கு சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மதுரை, கோவை, சேலம், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வழக்கம்போல் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதல் பஸ்கள் இன்று இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை திரும்ப இன்றும் நாளையும் சிறப்பு பஸ்கள்

அதன்படி, தமிழகம் முழுவதும்  8 ஆயிரத்து 304 சிறப்பு பேருந்துகள்  இன்று மற்றும்  நாளை இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மட்டும் கூடுதலாக 550 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதனால் மக்கள் முன் பதிவு செய்வதில் தீவிரமாக இருந்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தெற்கு ரெயில்வே சிறப்பு ரயில்களை ஏற்பாடுகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கூகுள் நிறுவனம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது – அதிரடி முடிவை எடுத்த  Google தலைவர்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *