எல்லையை தாண்டிய படகுகள் - இலங்கை மீனவர்கள் 14 பேர் அதிரடி கைது - நடந்தது என்ன?எல்லையை தாண்டிய படகுகள் - இலங்கை மீனவர்கள் 14 பேர் அதிரடி கைது - நடந்தது என்ன?

இலங்கை மீனவர்கள் 14 பேர் அதிரடி கைது: இந்தியக் கடல் எல்லைக்குள் இருந்து தமிழக மீனவர்கள் தங்கள்  எல்லைக்குள் வந்ததாக கூறி இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது மாதிரியான விஷயங்கள் தொடர்ந்து நீடித்தாலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை தமிழகத்திற்கு அழைத்து வர அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அதற்கு மாறாக இன்று எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதாவது, நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை அருகே இருக்கும் இந்தியக் கடல் பகுதியில் கடல் எல்லையைத் தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும்  கைது செய்யப்பட்ட 14 மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை மீனவர்கள் 14 பேர் அதிரடி கைது – sri lankan 14 fishermen arrested in india

டெல்லி பாஜக அலுவலகத்தில் திடீர் தீ விபத்து- பின்னணி காரணம் என்ன? தீயணைப்பு வீரர்கள்  தீவிரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *