கோவை மற்றும் நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் - மறைமுகமாக நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு !கோவை மற்றும் நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் - மறைமுகமாக நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு !

தற்போது கோவை மற்றும் நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் நடத்த மாவட்ட தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவை சார்ந்த நெல்லை மேயர் சரவணன் மற்றும் கோவை மேயர் கல்பனா ஆகியோரின் தங்களின் பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனை தொடர்ந்து நெல்லை மற்றும் கோவை மாநகராட்சி மேயர்களின் ராஜினாமா கடிதம் சிறப்புக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. அத்துடன் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் தேதியில் புதிய மேயர் தேர்தல் நடைபெறும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.Mayor election of Coimbatore and tirunelveli

இதனை தொடர்ந்து நெல்லை, கோவை மாநகராட்சி மேயர்களை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே.., வயதானவர்களுக்காக கொண்டுவரப்பட்ட சூப்பர் திட்டம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

மேலும் நெல்லை, கோவை மேயர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மேயர்களை தேர்வு செய்ய மாநகராட்சி கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *