சுந்தர் சியுடன் மீண்டும் இணையும் பிரபல காமெடி நடிகர் - ஒருவழியா முடிவுக்கு வந்த கீரி பாம்பு சண்டை!!சுந்தர் சியுடன் மீண்டும் இணையும் பிரபல காமெடி நடிகர் - ஒருவழியா முடிவுக்கு வந்த கீரி பாம்பு சண்டை!!

சுந்தர் சியுடன் மீண்டும் இணையும் பிரபல காமெடி நடிகர்: தமிழ் சினிமாவில் செம்ம கியூமரோட ஒரு ஜாலியான படத்தை எடுத்து சூப்பர் ஹிட் கொடுப்பவர் தான் இயக்குனர் சுந்தர். சி. இவர் கெரியரில் எத்தனையோ படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. ஏன் சமீபத்தில் வெளியான “அரண்மனை 4” திரைப்படம் கூட 100 கோடி வசூல் அடித்து சாதனை படைத்தது. aranmanai 4

இதற்கிடையில் சுந்தர்.சி இயக்கத்தை விட்டுவிட்டு நடிப்பு பக்கம் சென்ற போதிலும், தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். தற்போது புது படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார். sundar c

மேலும் அந்த படத்தில் சுந்தர் சியிடம் வரிந்து கட்டி கொண்டிருந்த வைகை புயல் வடிவேலுவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களுக்குள் என்ன சண்டை என்று இப்பொழுது வரை யாருக்கும் தெரியவில்லை. vadivelu

ஆனால் வடிவேலுவை சினிமாவில் தூக்கிவிட்ட இயக்குனர்களில் சுந்தர் சியும் ஒருவர் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால் வடிவேலுவை வைத்து கைப்புள்ளை , வீரபாகு போன்ற சூப்பர் ஹிட் கதாபாத்திரம் கொடுத்து அவரை மேலோங்கி தூக்கி விட்டுள்ளார் சுந்தர்.சி. ஆனால் அந்த நன்றி கூட இல்லாமல் வடிவேலு இனி எனக்கும் சுந்தர் சி-க்கும் ஆகாது என்று கூறி வந்துள்ளார்.

Also Read: விடாமுயற்சி படத்தின் Third Look வெளியீடு – திரிஷாவுடன் ரொமான்ஸ் செய்யும் அஜித்!!

இவர்களை மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டும் என்று குஷ்பு தொடர்ந்து வடிவேலுவிடம் சமரசம் பேசி வந்துள்ளாராம். ஆனால் ஒரு போதும் வடிவேலு செவி சாய்க்கவில்லையாம். cinema near me

அப்புறம் இப்போது எப்படி ஒப்புக்கொண்டார் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் இந்த காம்போ மீண்டும் சேருகிறது என்றால் படத்தில் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது என்று நம் அனைவருக்கும் தெரிந்தது தான்.

விரைவில் படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது. tamil cinema news latest.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *