தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் ஜெயிச்ச 7 நடிகைகள்: சௌந்தர்யா தான் வேணும்னு அடம்பிடித்த நடிகர்கள்!!தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் ஜெயிச்ச 7 நடிகைகள்: சௌந்தர்யா தான் வேணும்னு அடம்பிடித்த நடிகர்கள்!!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் ஜெயிச்ச 7 நடிகைகள்: இன்றைய சினிமா உலகில் நல்ல கதைகளை படமாக எடுப்பதை காட்டிலும், படத்தில் கிளாமர் காட்சி அல்லது ஒரு ஐட்டம் பாடலை வைத்தால் மட்டுமே படம் வெற்றி பெறும் என்ற கண்ணோட்டத்தில் இயக்குனர்கள் படத்தை இயக்குகிறார்கள்.

எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமானால் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற “காவலியா” பாடலில் தமன்னா கவர்ச்சி நடனம் போட்டிருப்பார்.

அதேபோல் சமீபத்தில் வெளியாகி 100 கோடி வசூல் செய்த அரண்மனை 4 படத்தில் “அச்சோ அச்சச்சோ” பாடலில் படு மோசமான ஆடைகள் அணிந்து தனது முழு கவர்ச்சியையும் வெளிக்காட்டி நடனம் ஆடி இருப்பார்.

அதை பார்க்கவே ரசிகர்கள் தியேட்டரில் அலைமோதியது. முன்பெல்லாம் கதைக்கு தேவைப்படும் சூழ்நிலையில் தான் கவர்ச்சியாக நடித்தார்கள்.

ஆனால் இப்போது ரசிகர்களை கவர வேண்டும் என்று கவர்ச்சியாக நடிக்கிறார்கள்.

ஆனால் அப்போதைய காலகட்டத்தில் கதைக்கு தேவை என்று கூறினாலும் கூட கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று கூறி

தமிழ் சினிமாவில் ஜெயித்து காட்டிய நடிகைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.  

தமிழ் சினிமாவில் மண் வாசனை என்ற படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்து பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.

ஒரு நடிகை பீக்கில் இருக்கும் பொழுது பெரிய நடிகர்களின் படத்தில் கவர்ச்சி காட்ட தேவை இல்லை என்றும்

திறமை இருந்தால் சினிமாவில் முன்னுக்கு வரலாம் என்று நிரூபித்து காட்டியவர் தான் ரேவதி.

பாக்யராஜின் முந்தானை முடிச்சு மூலம் தமிழ் இண்டஸ்ட்ரியில் காலடி எடுத்து வைத்த ஊர்வசி, இதுவரை 702 படங்களில் நடித்துள்ளார்.

இதில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகியவை அடங்கும். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.

இருப்பினும் தான் எந்த படத்திலும் கவர்ச்சியுடன் நடிக்க மாட்டேன் என்று ஒரு கட்டுக்கோப்புடன் வாழ்ந்து, இப்பொழுது வரை மக்களின் மனதிலும் வாழ்ந்து வருகிறார் ஊர்வசி.  

Also Read: கூலி படத்தில் வில்லனாக நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார்!! லோகேஷ் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட பிரபலம்!!

நெஞ்சத்தை கிள்ளாதே என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் தான் நடிகை சுகாசினி. இவர் பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் மனைவி ஆவார்.

இவரும் பல முன்னணி நடிகர்களுடன் பல மொழிகளில்  நடித்துள்ளார். ஆனால் அவர் எந்த படத்திலும் கவர்ச்சியாக நடித்தது இல்லை.

அதுவே அவரின் வெற்றிக்கு மூலதனமாக அமைந்தது என்று சொல்லலாம்.

தமிழில் பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நதியா. இதை தொடர்ந்து ரஜினி, சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டினார்.

ஆனால் கவர்ச்சியாக நடித்தால் மட்டும் தான் பெயர் வாங்க முடியும் என்பது கிடையாது என்று திறமையுடன் நடித்தாலும்

பெயர் வாங்க முடியும் என்று நிரூபித்து காட்டியவர் தான் நதியா.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். எந்த புதிய படம் வந்தாலும் ஹீரோக்கள் இவரை தான் வேண்டும் என்று அடம் பிடிப்பார்களாம்.

அந்த அளவுக்கு சினிமாவை தனது கட்டுக்குள் வைத்திருந்தார்.

தாம் சினிமாவில் உச்சத்தில் இருந்த போதிலும் தைரியமாக அரசியலில் இறங்கி ஒரு கை பார்த்து வந்தார்.

இவர் எந்த படத்திலும் கிளாமராக நடித்ததில்லை என்பதால் இப்பொழுது வரை தமிழ் சினிமாவில் பேசப்பட்டு வருகிறார். இவர் கடந்த 2004ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாக்குள் நுழைந்து, அப்புறம் அஜித், விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தனது சினிமா கெரியரில் எந்த ஒரு கவர்ச்சியும் இல்லாமல் நடித்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

அதனால் தான் நடிகர் அஜித்துக்கு அவரை பிடித்து போய் காதலித்து கடந்த 2000 ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

அப்போது இருந்து இப்பொழுது வரை சினிமாவுக்கு பிரேக் விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல ஹீரோயினாக கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை ரேகா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தமிழையும் தாண்டி பல மொழிகளில் நடித்துள்ளார்.

புரியாத புதிரில் ஆரம்பித்த அவருடைய சினிமா journey-யில் இப்பொழுது வரை எந்த ஒரு கவர்ச்சி கதாபாத்திரத்திலும் நடித்தது இல்லை.

இருப்பினும் அவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *