நோயாளிகள் கவனத்திற்கு.., தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்.. வெளியான முக்கிய தகவல்!!நோயாளிகள் கவனத்திற்கு.., தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்.. வெளியான முக்கிய தகவல்!!

வேலை நிறுத்த போராட்டம்

தமிழகத்தில் தொடர்ந்து பல அரசு ஊழியர்கள் அரசாங்கத்தை எதிர்த்து வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது 108 ஆம்புலன்ஸ்  டிரைவர்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர்  ஆர்.ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, ” தமிழகத்தில் கிட்டத்தட்ட 1353, 108 ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகிறது. சமீப காலமாக மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் குறைவாக இருப்பதால் நோயாளிகள் அடுத்த மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்களை அழைத்து செல்லவே ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் ஆபத்தான சூழலில் இருக்கும் மற்றவர்களை காப்பாற்ற ஆம்புலன்ஸ் செல்வதில்லை. அதுமட்டுமின்றி தனியாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆம்புலன்ஸில் வேலை பார்க்கும் ஓட்டுநர்களுக்கு அடிக்கடி விடுமுறை வழங்கப்படுவதால் ஓட்டுனர்கள் இன்றி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு  கூடுதலாக ஆம்புலன்ஸ்களையும், தேவைக்கேற்ற ஓட்டுனர்களையும் பணியமர்த்த வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் தற்போது வரை அரசு செவி சாய்க்காமல் இருந்து வருவதால், இதனைக் கண்டித்து தமிழகம் தழுவிய போராட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஈடுபட உள்ளனர்” எனக் கூறினார்.

அடேங்கப்பா.., எம்.பி தேர்தலில் இறங்கிய கீர்த்தி சுரேஷ் வீட்டார்?.., எந்த கட்சி தெரியுமா?.., கீர்த்தி பிரச்சாரம் செய்வாரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *