தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! லேசானது முதல் மிதமான மழையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் !தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! லேசானது முதல் மிதமான மழையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தற்போது தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் வெப்பம் தாக்கம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசி இதமான சூழல் நிலவி வருகிறது.

இதனையடுத்து இன்று முதல் 17ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அந்த வகையில், தமிழகத்தின் உள்ள 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அரசு பள்ளியில் நடக்கும் சிறப்பு வகுப்புகள் – நோக்கம் என்ன தெரியுமா? ஆசிரியர்கள் அதிருப்தி!

அதன் அடிப்படையில் திண்டுக்கல், மதுரை,தேனி, விருதுநகர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, நாமக்கல், பெரம்பலூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர்,தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *