தமிழக களைகட்டிய பட்ஜெட் தாக்கல்.., திடீரென சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!!தமிழக களைகட்டிய பட்ஜெட் தாக்கல்.., திடீரென சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!!

பட்ஜெட் தாக்கல்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், கடந்த 15-ம் தேதி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதன் பின்னர் கடந்த 3ம் மற்றும் 14-ஆம் தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.

இதையடுத்து 2024-2025ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் 19-ம் தேதி முதல் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய ஆரம்பித்ததை தொடர்ந்து, கடந்த 20-ம் தேதி வேளாண் நிதி நிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

இதனை தொடர்ந்து இன்று நடந்த சட்டசபையில் வேளாண் பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். அதனையடுத்து சட்டசபையை தேதி குறிப்பிடாமல் காலவரையின்றி சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார்.   

மக்களே உஷாரா இருங்க.., நாளை இந்த பகுதியில் கரண்ட் இருக்காது., இதுல உங்க ஏரியா இருக்கா? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *