தமிழக பாஜகவில் எச்.ராஜாவிற்கு புதிய பதவி - அண்ணாமலை லண்டன் சென்றதையடுத்து தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் அறிவிப்பு !தமிழக பாஜகவில் எச்.ராஜாவிற்கு புதிய பதவி - அண்ணாமலை லண்டன் சென்றதையடுத்து தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் அறிவிப்பு !

தற்போது தமிழக பாஜகவில் எச்.ராஜாவிற்கு புதிய பதவி அண்ணாமலையின் பணியை கவனிக்க எச்.ராஜா தலைமையில் குழு அமைப்பு, மேலும் கட்சியில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து மாநில தலைவரின் ஒப்புதலை பெறவேண்டும் என்று கூறப்பட்டு இந்த குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்துப் படிப்பதற்காக லண்டனுக்கு பயணம் சென்றுள்ளார்.

அத்துடன் நான்கு மாதம் லண்டனில் தங்கிப் படித்து முடித்துவிட்டு டிசம்பர் மாத இறுதியில் இந்தியா திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டனில் இருந்து திரும்பி வரும் வரை கட்சி பணிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஒன்று தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தலைமையிலான இந்த குழுவில், பாஜக மாநில துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர்கள் முருகானந்தம், ராம சீனிவாசன், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை ஃபார்முலா – 4 கார் ரேஸ் – முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் – முழு அறிவிப்பு இதோ !

மேலும் இந்த குழுவிற்குக் கட்சியில் தற்காலிக நடவடிக்கைகள் தொடர்பாக முடிவு எடுப்பதற்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் நிர்வாக ரீதியாக எந்த முடிவு எடுக்க வேண்டும் என்றால் பாஜகவின் தேசிய தலைமை மற்றும் தமிழக பாஜக தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும் என்று அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழக பாஜகவில் நடக்கும் மாற்றங்கள் குறித்து பாஜக தலைவருக்கும் தெரியப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *