தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கை - புதிய திட்டங்களை அறிவித்தார் அமைச்சர் சக்கரபாணி !தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கை - புதிய திட்டங்களை அறிவித்தார் அமைச்சர் சக்கரபாணி !

தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கை அடிப்படையில் புதிய பல திட்டங்களை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சக்கரபாணி புதிய திட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தமிழநாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பயிற்சி பெற்ற சுய உதவிக்குழு உறுப்பினர்களைக் கொண்டு, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019இன் கீழ் நுகர்வோரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வுப் பயிற்சி வழங்கப்படும்

மேலும் 9 சேமிப்புக் கிடங்குகள் ரூ.22 கோடியே 30 லட்சம் செலவில் புனரமைக்கப்படும்.

உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான நுகர்வோர் விழா கொண்டாடப்படும் என்றும், இந்த நிகழ்விற்கு ரூ.50 லட்சம் இதற்கு செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 11 சேமிப்பு கிடங்குகளில் மின்னணு எடைமேடைகள் ரூ.2 கோடியே 25 லட்சத்தில் அமைக்கப்படும்.

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ரூ.15 கோடியில் 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 100 அமுதம் நியாய விலைக் கடைகள் ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவுறுத்துள்ளது.

தமிழநாட்டில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் பூச்சிதாக்குதல் தடுப்பு பணிக்காக 2000 புறஊதாக்கதிர் விளக்குப் பொறிகள் ரூ.85 லட்சத்தில் நிறுவப்படும்.

பொது விநியோகத் திட்டப் பொருட்களை துரிதமாக கொண்டு செல்லும் வகையில் போக்குவரத்து வழித்தடங்கள் சீரமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.06.2024) ! மின்வெட்டு செய்யப்படும் இடங்களின் முழு விவரம் இதோ !

மேலும் 22 மாவட்டங்களில் அமைந்துள்ள 31 சொந்தக் கிடங்கு வளாகங்களில் ரூ.40 கோடியில் சுற்றுச்சுவர்கள் அமைக்கப்பட்டு கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.

இதனையடுத்து நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாக கருத்துப்பட்டறைகள் ரூ.15 லட்சம் செலவில் நடத்தப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி சட்டமன்றத்தில் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *