ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !

தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு

தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அத்துடன் பல்வேறு புதிய திட்டங்கள் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஓசூர் பன்னாட்டு விமான நிலையம் அமைய உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 2000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் தற்போது மின் வாகன உற்பத்தியில் ஓசூர் வளர்ந்து வருவதன் காரணமாக அங்கு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்த அவர்,

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் – பரிசீலனையில் இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் !

அத்துடன் ஆண்டுக்கு 3000 திற்கும் மேற்பட்ட பயணிகளை கையாளும் வகையில் இந்த விமான நிலைய கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *